Posts

ஒருத்தீ

Image
ஒருத் " தீ " ஆம் அவளும் அவளை அப்படித்தான் நினைத்திருந்தால்., எண்ணியதெல்லாம் எண்ணத்தில் மட்டுமே ஏக்கமாய் எரியும் வரை., பண்ணியதெல்லாம் பாவமோ எனும் பகற்க்கனவு சூழும் வரை., முன்னியதையும் பின்னியதையும் துறந்து நிகழில் நிலைக்கும் வரை., காலம் கடல் காற்று மலை அருவி பூமியென அனைத்தும் கடந்து சுத்த வெளியில் நிற்கும் வரை., அவ்வெளியில் இவ்வுயிரின் அடர் பிரகாச தரிசனத்தின் முன் அத் " தீ " நடுங்கி ஒடுங்கி பிரகாசம் இலக்கும் வரை., ஆம் அவள் " தீ " தான்... -பாலுமகேந்திரா-

கண்னேதிரே...

Image
மாடியில் அமர்ந்திருக்கின்றேன், தொட்டியில் மலர வேண்டிய ரோஜா, மொட்டுகளாய் காத்திருக்கின்றன; தேன்ராட்டைப் போல திரண்டு நின்ற, மேகங்கள் மழை பொழிய காத்திருக்கின்றன; சுற்றி நின்ற மரங்களெல்லாம் அசையாமல், காற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றன; மிளிர்ந்து கொண்டிருக்கும் நிலவும் நட்சத்திரங்களும், மேகங்களின் விலகுதலுக்கு காத்திருக்கின்றன; நடை பழகும் சிறு குழந்தை ஒன்று விழுந்து, எழுத்து நடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது; எதிர்வீட்டு மாடியில் தாத்தா ஒருவர் தொடர்ந்து வரும், இருமலைத் தடுக்க முயன்று கொண்டிருக்கிறார்; பக்கத்து வீட்டு புது மணப்பெண் கணவனின், அழைப்பிற்கு ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறாள்; பறந்து திரிய வேண்டிய காக்கைகளெல்லாம், பறக்காமல் மாடியில் கரைத்துக் காத்திருக்கின்றன; தாய்க்கு உணவளிக்காத ஒருவன் மிஞ்சிய உணவை, காக்கைக்கு வைத்து பெருமிதத்துடன் அவை உண்பதைக் காண காத்திருக்கிறான்; எழுதும் ஆவலில் அமர்ந்த நான் எங்கிருந்து, ஆரம்பிக்கலாம் என்று காத்திருக்கிறேன்; வெவ்வேறு நிகழ்வுகள் தான் என்றாலும் இவையனைத்தும் தன் அடுத்த நிகழ்வுகளுக்காக  காத்திருக்கின்றன, உலகம் இத்துடன் நின்றுவிட...

பிரதிபலிப்பு

Image
மொழியின் மீது நான் கொண்ட காதலால், பிறக்கும் சொற்கள், மொழியும் என்மீது காதல் கொண்டதனால் கவிதையாகின்றது; மொழியை காதலிக்க ஆயிரம் காரணம் எனக்குண்டு, ஆனால் மொழி என்னைக் காதலிக்க ஒரே காரணம்தான்; எவ்விதத்திலும் அதன் அழகை அர்த்தமற்றதாய் வர்ணித்துவிடக் கூடாது என்ற அச்சமே; இல்லையெனில் கம்பனையும் நக்கீரனையும் காதலித்து கசிந்துருகிய மொழி, இக்கலிகால மூடனையும் காதலிக்க அவசியம் என்ன இருக்கிறது; மொழியின் தொன்மையும் எனது புதுமையும் கலப்பதால் பிறக்கும் சொற்கள் கவிதுவமாய்  இருப்பதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் அதன் " மூலவிதை" மொழி அது தற்போது புதைந்திருக்கும் " மண்" நான்; என்னுள் வளர்ந்தாலும் மரம் விதையை பிரதிபலிக்குமே அன்றி மண்ணையல்ல….

நாளைய உதயம்

Image
சூரியன் மறைவதால் பிறக்கும் அழகிய இருள் போன்றதல்ல, அவள் மறைவால் என்னுளெழும் இருள்; மறுநாள் அவள் உதயம் வரை அவளின் நினைவென்ற விளக்குதான், என்னுடல்,மனம், உயிர், முழுதும் பரவி அவ்விருளை விரட்டுகிறது; அடடே விடிந்துவிட்டது இன்றிறவிற்க்கான ஒளியைச் சேகரிக்க கிளம்பினேன், அவள் உதயத்திற்கு, அதிர்ச்சி இன்றவள் வரவில்லை இருளதிகரித்து விட்டது அதிகாலையிலேயே; இன்றிரவு எப்படி கடப்பதென்ற எண்ணம் ஒரு புறம் இருக்க, இன்றை வேகமாக தள்ளிவிட்டால் நாளைய அவளின் உதயத்தை காணலாம் என்ற ஆவலில்; முடிந்தமட்டு சூரியனை கிழக்கிலிருந்து மேற்கிற்கு தள்ளிக் கொண்டிருந்தேன், காலம் என் வேகத்திற்கு செல்ல மறுத்து என்னைப் பார்த்து கேலியாய் சிரித்த போது; சூரியன் குரல் உக்கிரமாய் ஒலித்தது "அடப்பாவிகளா" அவள் நேற்றைய உன்னுதயத்தின், நினைவுகளுக்கு என்னைப் பின்தள்ள,நீ நாளைய  அவள் உதயத்திற்கு என்னை முன்தள்ளினால்; உலகில் உங்கள் காதலைத் தவிர எனக்கு வேறு  வேலையில்லையோ என்று, அலுத்துக் கொண்டு அசைய முடியாமல் சிறைபட்டு துடித்தது எங்கள் எண்ணத்தின் வலிமையால்; இப்பொழுது நாங்கள் மூவரும் காத்திருக்கின்றோம் எங்களின் இன்றைய மறைவிற்க...

சொல்லதிகாரம்

Image
சொல்லொன்றும் புதியதல்ல, சொல்பவனும் கவிஞனல்ல; சொல்ல வேண்டியவைகளெல்லாம் சொல்லியாயிற்று, சொற்ப்பதம் புதுப்பிக்க தேவை என்ன?; சொற்களால் கட்டப்பட்ட அழகிய கவி காவியமெல்லாம், சொக்கத்தங்கமாய் கண்னேதிரே மின்னுகயில்; சொல்லாமல் விட்ட சொல்லெதுவென்று தேடி, சொற்ப காலத்திற்குள் சொல்ல வேண்டியதைச் சொல்லாமற்ப் போவதென்பது; சொல்லி வளர்த்த மொழியை சொந்த அறிவினாலேயே; சொற்களை ஆயுதமாக்கி கொல்வதற்குச் சமம்; சொந்த வார்த்தைகளைன்று கூறும் சொல்லுரிமையை, சொல்லுலகம் யாருக்கும் முன்மொழியவில்லை; சொல்லமுதம் சுவைப்பதற்க்கேயன்றி அதனை தனதென்று, சொல்லும் சொல்லதிகாரம் தொல்காப்பியனுக்கும் இல்லை; சொல்லுலகின் தாயாகிய மொழிகள்தான் நம்முலகில், சென்றுவிட்ட காலத்தின் ஆதாரங்கள்; சொல்லனுபவத்தில் பயணித்தால் கம்பன் காலத்தையும், சொல்லிவிடும் காலக்கருவியாயிருக்கிறது மொழிகள்; சொல்லுலகின் விருட்சமாகிய மொழிகளியிலிருந்து வேர்விட்ட, சொற்கள்தான் நம் மானுட வாழ்வியலின் அர்த்தங்கள்; சொல்லினிது எனவே சொல்வனவைச் சொல்க, பொருள் அழகானால் அது கவிதை , பொருள் சுவைத்தால் அது இலக்கியம் , பொருள் புரிந்தால் அது கட்டுரை , பொருள் புதிரானால் அது கத...

பேருண்மை...

Image
இந்த இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் அனைத்தும் உணர்வு சார்ந்தே வாழ்கின்றன. இதில் மனிதன் என்னும் அற்(ப)புதமான படைப்பில் மட்டும் இன்பம் முன் ஓட துன்பம் பின் துரத்த  இவ்விரு துருவங்களிடையே  அன்பும்-கோபமும், காதலும்- காமமும், செல்வமும்-வருமையும்,நட்பும்-பகைமையிம், போட்டியும்-பொறாமையும், அறிவும்-அறியாமையும், தற்பெருமையிம்-வீழ்ச்சியிம்,ஆட்சியும்-அடிமையும், பேராசையும்-பேராதிக்கமும் ஒன்றன்பின் ஒன்றோடி பின் அவற்றிற்குள்ளேயே முட்டி மோதி அதை குணமென்றும் உணர்வென்றும் நம்பி இவ்விரு துருவத்தின் முழுமையையே உணராமல் குழப்பத்திலேயே உழன்று கிடைத்த காலத்தை இயற்கையிடம் திருப்பி ஒப்படைத்து விட்டு காலம் கடந்து விடுகின்றனர்.                  ஒரு ஜனனமும் ஒரு மரணமும் ஆழ்ந்த வலி  வேதனைகளுக்கு  பின்பே நிகழ்கிறது. இந்த சிறிய உண்மை அனைவரும் அறிந்ததே, ஆனால் விழிப்புணர்வில் மறந்து போன பேருண்மையும் இதுவே.ஒரு உயிரின் பிறப்பிற்காக தாய் ஏற்றுக் கொண்ட வலி வேதனையை, அந்த உயிர் தான் ஏற்றுக்கொள்ளும் பொழுது நிகழ்கிறது மரணம். இவ்விரு வலி வேதனை...

எது அழகு...

Image
அடிப்படையில் அழகு என்பது ஒரு தமிழ் சொல்தான் இதை சீனாகாரனிடம் காட்டினால் அவனுக்கு புரியாது, ஆனால் என்ன ஒரு அழகு என்றால் அவன் மொழியிலும் 美女(Měinǚ) இப்படி சொல் இருக்கிறது. அப்படி என்றால் அழகு என்பது எது? இது தான் அழகு என்று அதற்குண்டான வரம்பை நியமித்தது யார்?                              என் சிற்றறிவிலிருந்து, ஒரு புள்ளியில் இருந்து வெடித்து சிதறி சுமார் ஆயிரத்து முன்னூறு கோடி வருடங்களாக எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய பல கோடிக்கணக்கான கிரகங்களும் விண்மீன்களும், இன்னும் சொல்லபோனால் நூறு கோடிக்கும் அதிகமாக நம்மை போல சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம். இப்பெரும் பிரபஞ்சத்தில் நாம் சூரிய குடும்பத்தின் மதிப்பு எதுவென்றால் பரந்த கடலில் உள்ள சிறிய மண் துகளுக்கு என்ன மதிப்போ அவ்வளவே!..                                இத்துகளிலும் படைப்புகள் நிகழவே ஒரு செல்லில் தொடங்கி இன்று பல நூறு கோடி செல் கொண்ட ...