Posts

Showing posts from July, 2020

கண்னேதிரே...

Image
மாடியில் அமர்ந்திருக்கின்றேன், தொட்டியில் மலர வேண்டிய ரோஜா, மொட்டுகளாய் காத்திருக்கின்றன; தேன்ராட்டைப் போல திரண்டு நின்ற, மேகங்கள் மழை பொழிய காத்திருக்கின்றன; சுற்றி நின்ற மரங்களெல்லாம் அசையாமல், காற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றன; மிளிர்ந்து கொண்டிருக்கும் நிலவும் நட்சத்திரங்களும், மேகங்களின் விலகுதலுக்கு காத்திருக்கின்றன; நடை பழகும் சிறு குழந்தை ஒன்று விழுந்து, எழுத்து நடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது; எதிர்வீட்டு மாடியில் தாத்தா ஒருவர் தொடர்ந்து வரும், இருமலைத் தடுக்க முயன்று கொண்டிருக்கிறார்; பக்கத்து வீட்டு புது மணப்பெண் கணவனின், அழைப்பிற்கு ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறாள்; பறந்து திரிய வேண்டிய காக்கைகளெல்லாம், பறக்காமல் மாடியில் கரைத்துக் காத்திருக்கின்றன; தாய்க்கு உணவளிக்காத ஒருவன் மிஞ்சிய உணவை, காக்கைக்கு வைத்து பெருமிதத்துடன் அவை உண்பதைக் காண காத்திருக்கிறான்; எழுதும் ஆவலில் அமர்ந்த நான் எங்கிருந்து, ஆரம்பிக்கலாம் என்று காத்திருக்கிறேன்; வெவ்வேறு நிகழ்வுகள் தான் என்றாலும் இவையனைத்தும் தன் அடுத்த நிகழ்வுகளுக்காக  காத்திருக்கின்றன, உலகம் இத்துடன் நின்றுவிட...

பிரதிபலிப்பு

Image
மொழியின் மீது நான் கொண்ட காதலால், பிறக்கும் சொற்கள், மொழியும் என்மீது காதல் கொண்டதனால் கவிதையாகின்றது; மொழியை காதலிக்க ஆயிரம் காரணம் எனக்குண்டு, ஆனால் மொழி என்னைக் காதலிக்க ஒரே காரணம்தான்; எவ்விதத்திலும் அதன் அழகை அர்த்தமற்றதாய் வர்ணித்துவிடக் கூடாது என்ற அச்சமே; இல்லையெனில் கம்பனையும் நக்கீரனையும் காதலித்து கசிந்துருகிய மொழி, இக்கலிகால மூடனையும் காதலிக்க அவசியம் என்ன இருக்கிறது; மொழியின் தொன்மையும் எனது புதுமையும் கலப்பதால் பிறக்கும் சொற்கள் கவிதுவமாய்  இருப்பதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் அதன் " மூலவிதை" மொழி அது தற்போது புதைந்திருக்கும் " மண்" நான்; என்னுள் வளர்ந்தாலும் மரம் விதையை பிரதிபலிக்குமே அன்றி மண்ணையல்ல….

நாளைய உதயம்

Image
சூரியன் மறைவதால் பிறக்கும் அழகிய இருள் போன்றதல்ல, அவள் மறைவால் என்னுளெழும் இருள்; மறுநாள் அவள் உதயம் வரை அவளின் நினைவென்ற விளக்குதான், என்னுடல்,மனம், உயிர், முழுதும் பரவி அவ்விருளை விரட்டுகிறது; அடடே விடிந்துவிட்டது இன்றிறவிற்க்கான ஒளியைச் சேகரிக்க கிளம்பினேன், அவள் உதயத்திற்கு, அதிர்ச்சி இன்றவள் வரவில்லை இருளதிகரித்து விட்டது அதிகாலையிலேயே; இன்றிரவு எப்படி கடப்பதென்ற எண்ணம் ஒரு புறம் இருக்க, இன்றை வேகமாக தள்ளிவிட்டால் நாளைய அவளின் உதயத்தை காணலாம் என்ற ஆவலில்; முடிந்தமட்டு சூரியனை கிழக்கிலிருந்து மேற்கிற்கு தள்ளிக் கொண்டிருந்தேன், காலம் என் வேகத்திற்கு செல்ல மறுத்து என்னைப் பார்த்து கேலியாய் சிரித்த போது; சூரியன் குரல் உக்கிரமாய் ஒலித்தது "அடப்பாவிகளா" அவள் நேற்றைய உன்னுதயத்தின், நினைவுகளுக்கு என்னைப் பின்தள்ள,நீ நாளைய  அவள் உதயத்திற்கு என்னை முன்தள்ளினால்; உலகில் உங்கள் காதலைத் தவிர எனக்கு வேறு  வேலையில்லையோ என்று, அலுத்துக் கொண்டு அசைய முடியாமல் சிறைபட்டு துடித்தது எங்கள் எண்ணத்தின் வலிமையால்; இப்பொழுது நாங்கள் மூவரும் காத்திருக்கின்றோம் எங்களின் இன்றைய மறைவிற்க...

சொல்லதிகாரம்

Image
சொல்லொன்றும் புதியதல்ல, சொல்பவனும் கவிஞனல்ல; சொல்ல வேண்டியவைகளெல்லாம் சொல்லியாயிற்று, சொற்ப்பதம் புதுப்பிக்க தேவை என்ன?; சொற்களால் கட்டப்பட்ட அழகிய கவி காவியமெல்லாம், சொக்கத்தங்கமாய் கண்னேதிரே மின்னுகயில்; சொல்லாமல் விட்ட சொல்லெதுவென்று தேடி, சொற்ப காலத்திற்குள் சொல்ல வேண்டியதைச் சொல்லாமற்ப் போவதென்பது; சொல்லி வளர்த்த மொழியை சொந்த அறிவினாலேயே; சொற்களை ஆயுதமாக்கி கொல்வதற்குச் சமம்; சொந்த வார்த்தைகளைன்று கூறும் சொல்லுரிமையை, சொல்லுலகம் யாருக்கும் முன்மொழியவில்லை; சொல்லமுதம் சுவைப்பதற்க்கேயன்றி அதனை தனதென்று, சொல்லும் சொல்லதிகாரம் தொல்காப்பியனுக்கும் இல்லை; சொல்லுலகின் தாயாகிய மொழிகள்தான் நம்முலகில், சென்றுவிட்ட காலத்தின் ஆதாரங்கள்; சொல்லனுபவத்தில் பயணித்தால் கம்பன் காலத்தையும், சொல்லிவிடும் காலக்கருவியாயிருக்கிறது மொழிகள்; சொல்லுலகின் விருட்சமாகிய மொழிகளியிலிருந்து வேர்விட்ட, சொற்கள்தான் நம் மானுட வாழ்வியலின் அர்த்தங்கள்; சொல்லினிது எனவே சொல்வனவைச் சொல்க, பொருள் அழகானால் அது கவிதை , பொருள் சுவைத்தால் அது இலக்கியம் , பொருள் புரிந்தால் அது கட்டுரை , பொருள் புதிரானால் அது கத...

பேருண்மை...

Image
இந்த இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் அனைத்தும் உணர்வு சார்ந்தே வாழ்கின்றன. இதில் மனிதன் என்னும் அற்(ப)புதமான படைப்பில் மட்டும் இன்பம் முன் ஓட துன்பம் பின் துரத்த  இவ்விரு துருவங்களிடையே  அன்பும்-கோபமும், காதலும்- காமமும், செல்வமும்-வருமையும்,நட்பும்-பகைமையிம், போட்டியும்-பொறாமையும், அறிவும்-அறியாமையும், தற்பெருமையிம்-வீழ்ச்சியிம்,ஆட்சியும்-அடிமையும், பேராசையும்-பேராதிக்கமும் ஒன்றன்பின் ஒன்றோடி பின் அவற்றிற்குள்ளேயே முட்டி மோதி அதை குணமென்றும் உணர்வென்றும் நம்பி இவ்விரு துருவத்தின் முழுமையையே உணராமல் குழப்பத்திலேயே உழன்று கிடைத்த காலத்தை இயற்கையிடம் திருப்பி ஒப்படைத்து விட்டு காலம் கடந்து விடுகின்றனர்.                  ஒரு ஜனனமும் ஒரு மரணமும் ஆழ்ந்த வலி  வேதனைகளுக்கு  பின்பே நிகழ்கிறது. இந்த சிறிய உண்மை அனைவரும் அறிந்ததே, ஆனால் விழிப்புணர்வில் மறந்து போன பேருண்மையும் இதுவே.ஒரு உயிரின் பிறப்பிற்காக தாய் ஏற்றுக் கொண்ட வலி வேதனையை, அந்த உயிர் தான் ஏற்றுக்கொள்ளும் பொழுது நிகழ்கிறது மரணம். இவ்விரு வலி வேதனை...

எது அழகு...

Image
அடிப்படையில் அழகு என்பது ஒரு தமிழ் சொல்தான் இதை சீனாகாரனிடம் காட்டினால் அவனுக்கு புரியாது, ஆனால் என்ன ஒரு அழகு என்றால் அவன் மொழியிலும் 美女(Měinǚ) இப்படி சொல் இருக்கிறது. அப்படி என்றால் அழகு என்பது எது? இது தான் அழகு என்று அதற்குண்டான வரம்பை நியமித்தது யார்?                              என் சிற்றறிவிலிருந்து, ஒரு புள்ளியில் இருந்து வெடித்து சிதறி சுமார் ஆயிரத்து முன்னூறு கோடி வருடங்களாக எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய பல கோடிக்கணக்கான கிரகங்களும் விண்மீன்களும், இன்னும் சொல்லபோனால் நூறு கோடிக்கும் அதிகமாக நம்மை போல சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம். இப்பெரும் பிரபஞ்சத்தில் நாம் சூரிய குடும்பத்தின் மதிப்பு எதுவென்றால் பரந்த கடலில் உள்ள சிறிய மண் துகளுக்கு என்ன மதிப்போ அவ்வளவே!..                                இத்துகளிலும் படைப்புகள் நிகழவே ஒரு செல்லில் தொடங்கி இன்று பல நூறு கோடி செல் கொண்ட ...

என் விடுதலை...

Image
குழந்தை பருவத்தில்,  குடும்ப பிரச்சினை உதித்தது; வாலிப பருவத்தில்,  வலியுடன் உறவுகள் முறிந்தது; படிக்கும் படிப்பில்,  பணத்தாள் தலையிட்டது; குடும்பச் சுமை,  குற்ற உணர்ச்சியின்றி தலையில் விழுந்தது; வாய்த்த காதலும்,  வறுமையால் வீழ்ந்தது; சொந்த சோகங்கள்,  சொந்தபந்தங்களுக்கு வெறுப்பேற்றியது; சொல்லி அழக்கூட,  சொந்தமில்லா நிலை ஏற்பட்டது; நட்பே அனைத்துமாகி,  அந் நட்புடன் நாடெங்கும் சுற்ற சுகமுண்டானது; பேதமில்லா நட்புறவில்,  போதையின் அனைத்து ரகமும் கண்டறியப்பட்டது; சமுதாய கோட்பாட்டில்,  சற்றும் நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டது; சுடர் விடும் உள் ஒளி,  சுட்டெரிக்கவே தேடல் தோன்றியது; புத்தகத்தின் அரவணைப்பால்,  பூவுலகில் என் அறியாமை அறுக்கப்பட்டது; உள்கடந்து சென்றதால்,  உயிரின் உண்மையும் அறிமுகமானது; பேரமைதி மட்டுமே,  பேரியக்கத்தின் உண்மையான தேடலானது; சோகங்கள் சோகங்களல்ல,  சோர்வுறும் போது எழுப்பும் மருந்தானது; வலிகள் வலிகளல்ல,  வசந்தங்கள்  பிறக்கும் வழியானது; வீழ்ச்சிகள் வீழ்ச்சிகளல்ல,  வளர்ச்சியில் க...

மனச்சான்று...

Image
கருப்பு நிறத்தவள் என்,  கருவிழியிலிருந்து  அகலாதவள்; ஐயமில்லாமல் கூறுவேன் அவள்,  ஐந்தடி ஆறு அங்குலம் இருப்பாள்; சுருள் சுருளாய் நீண்டிருக்கும் அவள்,  கூந்தல் கூத்தாடும் காற்றின் ராகத்தில்; நேர்த்தியான ஓவியம் போன்ற முகமும்,  பூர்த்தியான சிற்பம் போன்ற உடலும் பெற்றவள்; குறுகுறு பார்வையிலும் துறுதுறு பேச்சிலும்,  குழந்தைக்கு ஒருபடி மேலானவள் அவ்வளவே; என் உலகிற்குள் வருவதற்கு அவள்,  என் அனுமதி கோரியதாக நினைவில்லை; காதலால் கசிந்துருகியதையும் கண்டேன் அவள்,  கண்களால் என்னை கட்டிப்போட்டதையும் கண்டேன்; நானனைத்தும் உனக்கென்றால் அவள்,  நானில்லாமைக் கடினமென்றால் குழம்பினேன்; ஓரிரவு வருகை தந்தால் என்னறைக்கு அவள்; ஓராயிரம் இரவு ஏக்கத்தை உடைத்தால் நிர்வாணமாய்; அன்றிரவு முதல் பைத்தியத்தைப் போல அவள்,  அன்பிற்கும் அருகாமைக்கும் மட்டுமே ஏங்கினேன்; காலத்தின் கோர விளையாட்டு என்,  காதல் மைதானத்தை சீர் கெடுத்தது வருந்தினேன்; காதலியின் பிரிவை விட காலத்தால் அவள்,  காணமற்ப்போனது என்னை உயிருடன் கொன்றது; என்னனுமதியின்றி உள்நுழைந்த அவள்,  எண...

சுயசோதனை..

Image
ஜகத்தினை எதிர்க்க துணிந்த என் சத்தியம், அஞ்சுகிறது என் சுயத்தை வினவ; மானுடம் செய்யக்கூடாதவை என்ற என் பட்டியல்,  உரைக்கிறது என் சுயத்தை ஊரறிய; உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற என் பிரிவினை,  நகைக்கிறது என் சுயத்தை நாடறிய; மாடியில் நின்று ஏழை பாவம் என்ற என் கருணை,  தோலுரிக்கிறது என் சுயத்தை உலகறிய; ஆணுக்கு குறைந்தவளே பெண் என்ற என் கருத்து,  வெளிசமிடுகிறது என் சுயத்தை பெண்ணறிய; ஒழுக்கம் கட்டுப்பாடு பிறர்க்கே என்ற என் சமரசம்; மேய்கிறது  என் சுயத்தை உடலறிய; பசியும் பிணியும் எளியவர்க்கே என்ற என் சுயநலம்,  சுடுகிறது  என் சுயத்தை உயிரறிய; நீதியும் நேர்மையும் விற்பனைக்கே என்ற என் தாராளம்,  கொல்கிறது என் சுயத்தை கடவுளறிய... 

மனங்கொள்ளாமை...

Image
புரிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறேன் எனை,  புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை; சகல துன்பங்களையும் அறிமுகப்படுத்திய உலகு,  சாமானிய அன்பையும் அமைதியையும் மறுக்கிறது; விவரமறிந்த காலந்தொட்டு கவனித்து பார்த்தால்,  வாழ்வின் இருளில் மட்டுமே பயணித்திருக்கிறேன்; காலத்தின் போக்கிலென் உழைப்பென்னும் விதை,  கானகமாகும் கனவு கண்ணெதிரே சிதரி சிதைகிறது; அறியாமையால் சரிந்திருந்தால் கூட ஏற்றிருப்பேன்,  ஆழ்ந்த அறிவுங்கூட காக்கவில்லை வருந்துகிறேன்; வெற்றி கிட்டவில்லையே என்பதல்ல என் புலம்பல்,  வெறுமையை மட்டுமே கடப்பதாலிந்த விசும்பல்; அன்பும் ஆறுதலும் கலந்த வார்த்தைகள் கூட,  ஆற்றாமையால் அக்கினியாய்ச் சுடுகிறது; நானென் உறவுகளிடமும் நட்புகளிடமுமிருந்து தனித்து,  நாடோடியைப் போல அனாதயாய் அலைகிறேன்; தவிப்பையிம் வலியையும் தன்னடக்கிக்கொள்வதால்,  தன்னுள்ளேயே போர் புரிந்து மனதை மாய்க்கிறேன்; தாயன்பைக்கூட தாங்கிக்கொள்ளும் மனநிலையைக்,  தகவலின்றி தற்காலிகமாய்த் தொலைத்திருக்கிறேன்; பேச்சிலிருந்த நம்பிக்கையும் மூச்சிலிருந்த வேகமும்,  போகிற போக்கில்...

இருளொளி..

Image
துள்ளியெழுந்து அமர்ந்தேன் படுக்கையில்,  துயிலின் கலவரமதென்பதை உணர்ந்தேன், ஏனெனில்; தூங்கிக் கொண்டே காலமனைத்தும் கழிந்தாற் போல்,  துக்கமான கொடுங்கனவு கலவரமூட்ட கண்விழித்தேன்; கனவென்றதும் கான மறுத்து விழித்துக்கொண்டாயே,  கல்லறையில் இக்கனா வந்தால்? காரிருள் வினவியது; இக்கேள்வி மேலுமென்னை அச்சமூட்ட என்  வாழ்வின்,  இன்றுவரை நானழித்த " நொடிகள் " என்னை ஏசியது; பகற்கனா காணும் வாழ்விழும், பழைமைப் பேச்சிலும்,  பகட்டிலும், பாழாய்ப்போன " நிமிடங்கள் " நிராகரித்தது; எண்ணத்தையும் உடலையும் உயிரையும் சீராக்கி,  என்னுலகு பயனுற வாழாத " மணிநேரம் " மன்னிக்காது; நாளை செய்யலாமென்று நானமைத்த செயல்கள்,  நாட்குறிப்பிலேயே மடிந்த " நாட்கள் " நடுங்கச்செய்தது; வெறுப்புடன் விடிந்த திங்களின் நடுவே ஞாயிருக்காக; வெறித்து காத்திருந்த " வாரங்கள் " வசைபாடியது; இறந்தகாலம் எதிர்காலம் பற்றி மட்டுமே கருதி; இழந்த நிகழ்காலத்தின் " மாதங்கள் " மனங்குமுறியது; சிறு வயதுதானே!. என்ற சிறுபிள்ளைத்தனத்தால்,  சிறுத்தையாய் கடந்த " ஆண்டுகள் "அச்சுறுத்தியது; இ...

அடங்(கா)தல்...

Image
ஒரு வரியில் சொல்ல முடிந்திருந்தால், என்றோ சொல்லியிருப்பேன்  உன்னிடம் நான் கொண்ட காதலின் முழுமையை...  ஒரு கோடி வார்த்தைகளைக் கோர்த்தாலும்,  சொல்ல முடியுமென்று தோன்றவில்லை என்னுள் இருக்கும் உந்தன் முழுமையை;...  எல்லை இல்லாமல் என்னுள் கரைந்திருக்கும்,  உன்னை எந்த எல்லையின் உதவியோடு எடுத்துரைப்பேன் என்னை நீ உணர?...  நொடிப்பொழுதேனும் உன் நினைவுகள்,  என்னுள் அகன்றிருந்தால் உலகம் நின்றுவிட்ட உண்மையை உரைத்திருப்பேன் உன்னிடம்!...  இலக்கியத்திலும் காண்கின்றேன் உன்னை,  இயற்கையிலும் காண்கின்றேன் எங்குள்ளது என்னுலகில் நீ இல்லா கிரகிப்பு... என்றோ நீ பேசிய அழகிய மொழிகளெல்லாம்,  இப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னை கடந்து செல்லும் காற்றில்...  உன் கண்களை நான் சந்தித்த வேளை,  உயிரிலிருந்து விசும்பிய உட்குரல் கூறியது உலகமனைத்தும் இனி இவள் கண் வழியே...  சிறுவயதில் விரல் பிடித்து நடை பழகியது தான்,  நினைவில்லை என்றால், உன் விரல் பிடித்த கணத்தில் நான் இவ்வுலகில் இருந்ததாகவும் நினைவில்லை...  காட்டாற்று வெள்ளம் போல்...

மாற்றம்

Image
மாறாமலிருக்கும் இயற்கை,  மாறிக்கொண்டே இருக்கும்,  மனிதனைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது..,  மாறிக்கொண்டே இருக்கும்,  மனிதன் மாற்றமென நினைத்து,  இயற்கையைத் தாக்கிக் கொண்டே இருக்கிறான்..,  மாற்றம் வேண்டி மனிதன்,  மகத்தான மனிதத்தை மனப்பிறழ்வால்,  தன் பட்டியலில் பிரித்து கொண்டே இருக்கிறான்..,  உயர்வென்று எதை உணர்ந்தானோ?.,  தாழ்வென்று எதை உணர்ந்தானோ?.,  தரங்கெட்ட தரத்தில் மாற்றந்தனை தேடுகிறான்..,  விந்து அண்டத்தில் மோதிய,  வேதிக் கோளாறினால் தோன்றியவன், வானத்திலிருந்து குதித்தவன் போல் நடிக்கின்றான்..,  இனமென்கிறான் சாதி மதமென்கிறான்,  இச்சூழ்நிலையை அரசியலாக்குகின்றான்,  இவ்வரசியலால் மனிதர்களுக்குள் வேலியிடுகிறான்..,  கட்சிகளென்றான் கொள்களென்றான்,  காலமாற்றத்தினை கவனித்தால் சாமானியனுக்கு, கண்ணீரை மட்டுமே பரிசளித்திருக்கிறான்..,  தலைவன் ஒருவன் இருந்தாலொழிய,  தலையெழுத்து மாறாதென்று மனிதன் தன் தலையில்,  தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டான்..,  அத்தலைவன் தத்துவமாவதோடு,  அத்தத்த...

என் எழுத்துரிமை

Image
இலக்கியம் இயலாதவனாக இருப்பவன்தான் இருப்பினும் இச்சையால் இயற்றுகிறேன்;எனினும் என்னுள் எழும் எதார்த்தமான எழுத்துக்களை எழுத்தறிவாளன் ஏற்ப்பானா?..  இல்லை சொல் பொருள் மரபு வாக்கிய பிழையென்று சொல்லி ஏற்க்க மறுப்பானா?... இப்படி யோசித்தால் யோகமாய்ப் பெற்ற ஞானம் யாருக்கும் பலன் கொடுக்குமா?... உண்மை உயிரிலிருந்து உதிக்கும் உன்னதங்களை உலகுக்கு உரைப்பது தவமல்லவா?... சொல் புதிதாய்ப் புத்துயிர்ப்புற்று புதை மண்ணிலிருந்து புதுமையில் பூப்பது தவறாகுமா?... அறம் மதியிலந்து மனிதனை மனிதன் மாய்க்கின்ற மரபிற்கு அறம்பாடுதல் பாவமாகுமா? பொருள் பொக்கிஷம் போலல்லாமல் பாமரனும்  பெறும் பேராவது பெருமையல்லவா?... இன்பம் கற்ப்பியல் களவியலுடன் என் கற்பனையியலும் கலந்து கவிபாடக் கிடைக்காதா?... வாக்கியம் வாசிப்பவனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் விளக்காக விளங்கினால் போதாதா?... கவிதை கேட்டவனின் கேட்ட நொடியை கோடிட்டு காக்கும் ரசனையானால் பற்றாதா?... கதை கடலெனக் கிடக்கும் கதாபாத்திரங்களில் என்  கதாபாத்திரம் கலப்பது கலப்படமோ?... எழுத்து மக்களை மகிழ்வித்து மானுடத்தைச் சீர்திருத்தி சிந்திக்கத் தூண்டும் கருவிய...