சுயசோதனை..

ஜகத்தினை எதிர்க்க துணிந்த என் சத்தியம், அஞ்சுகிறது என் சுயத்தை வினவ;

மானுடம் செய்யக்கூடாதவை என்ற என் பட்டியல், 
உரைக்கிறது என் சுயத்தை ஊரறிய;

உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற என் பிரிவினை, 
நகைக்கிறது என் சுயத்தை நாடறிய;

மாடியில் நின்று ஏழை பாவம் என்ற என் கருணை, 
தோலுரிக்கிறது என் சுயத்தை உலகறிய;

ஆணுக்கு குறைந்தவளே பெண் என்ற என் கருத்து, 
வெளிசமிடுகிறது என் சுயத்தை பெண்ணறிய;

ஒழுக்கம் கட்டுப்பாடு பிறர்க்கே என்ற என் சமரசம்;
மேய்கிறது  என் சுயத்தை உடலறிய;

பசியும் பிணியும் எளியவர்க்கே என்ற என் சுயநலம், 
சுடுகிறது  என் சுயத்தை உயிரறிய;

நீதியும் நேர்மையும் விற்பனைக்கே என்ற என் தாராளம், 
கொல்கிறது என் சுயத்தை கடவுளறிய... 

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்