மனச்சான்று...

கருப்பு நிறத்தவள் என், 
கருவிழியிலிருந்து  அகலாதவள்;

ஐயமில்லாமல் கூறுவேன் அவள், 
ஐந்தடி ஆறு அங்குலம் இருப்பாள்;

சுருள் சுருளாய் நீண்டிருக்கும் அவள், 
கூந்தல் கூத்தாடும் காற்றின் ராகத்தில்;

நேர்த்தியான ஓவியம் போன்ற முகமும், 
பூர்த்தியான சிற்பம் போன்ற உடலும் பெற்றவள்;

குறுகுறு பார்வையிலும் துறுதுறு பேச்சிலும், 
குழந்தைக்கு ஒருபடி மேலானவள் அவ்வளவே;

என் உலகிற்குள் வருவதற்கு அவள், 
என் அனுமதி கோரியதாக நினைவில்லை;

காதலால் கசிந்துருகியதையும் கண்டேன் அவள், 
கண்களால் என்னை கட்டிப்போட்டதையும் கண்டேன்;

நானனைத்தும் உனக்கென்றால் அவள், 
நானில்லாமைக் கடினமென்றால் குழம்பினேன்;

ஓரிரவு வருகை தந்தால் என்னறைக்கு அவள்;
ஓராயிரம் இரவு ஏக்கத்தை உடைத்தால் நிர்வாணமாய்;

அன்றிரவு முதல் பைத்தியத்தைப் போல அவள், 
அன்பிற்கும் அருகாமைக்கும் மட்டுமே ஏங்கினேன்;

காலத்தின் கோர விளையாட்டு என், 
காதல் மைதானத்தை சீர் கெடுத்தது வருந்தினேன்;

காதலியின் பிரிவை விட காலத்தால் அவள்,  காணமற்ப்போனது என்னை உயிருடன் கொன்றது;

என்னனுமதியின்றி உள்நுழைந்த அவள், 
எண்ணங்களை மட்டும் என்னுள் விட்டுத்தொலைந்தால்;

மூவாயிரம் இரவுகள் கடந்தாயிற்று அவள், 
மூச்சிற்க்காற்று முனங்கிக் கொண்டேயிருக்கிறது
என் காதுகளில்;

இரு உயிரின் இரகசிய வாழ்வியலில் நிகழ்ந்த, 
இத்தனை அற்புதத்திற்கும் அழிவிற்கும் வேறேதும்
சான்றில்லை இவ்வரிகளைத் தவிர!!!...... 

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்